kathirkural

 நால்வர்க்கு ஊண்தருவோம் நாமுண்போம் நீத்தார்தம் வாழ்வெண்ணி வாழ்வோம் சிறந்து கோவணம் கட்டான்தான் வேட்டி தலைப்பாகை ஆவணுமா என்பான் எரிந்து பழமென்...

Sunday, 8 August 2021

kural2

 சாலையறும் வீடமிழும் செய்யழுகும் கார்பெருகின்
சோலையெலாம் வேர்நழுவிப் போம்

 
ஆக்கும் திறனில்லை ஆயினும் வந்ததைத்
தேக்கும் திறனுண்டேல் நன்று
 
மறுமை தொழுதுபொல்லா இம்மை பொறுத்தல்
வறுமை உழலும் வழி
 
உலகு பெருங்கூண்டு நாம்கிளிக் கூட்டம்
வளர்ப்பது யார்விளை யாட்டு
 
இருப்பார்நூல் வாங்கிடுவர் இல்லாரென் செய்வர்
விருப்புநூல் கற்பதற் கு 

ஆவிபறி போகுமையோ ஆலையைத்தான் மூடென்றோம்
ஆவி பறித்த தரசு
 
 அழிமழை ஓசைகேட்டு அஞ்சுதே நெஞ்சம்
பொழிமழையே போதும் நிறுத்து
 
இவரை இதனால் மணமுடிப்போம் என்றாய்ந்(து)
அவரையே காதல் செயல்
 
நாடாள்வோர் செய்பிழையால் நோய்க்கஞ்சி வாழ்விழந்து
காடாக மாறுதிந்த நாடு
 
நொடியில் உருட்டி விழுங்கு(து) இயற்கை
துடித்துச் சுருங்குது வாழ்வு 

No comments:

Post a Comment