kathirkural

 நால்வர்க்கு ஊண்தருவோம் நாமுண்போம் நீத்தார்தம் வாழ்வெண்ணி வாழ்வோம் சிறந்து கோவணம் கட்டான்தான் வேட்டி தலைப்பாகை ஆவணுமா என்பான் எரிந்து பழமென்...

Saturday, 28 August 2021

Kathir Thirukural

 வெட்ட வெளியில் சிவன்சிலை காய்ந்திட

நட்டதற்கு ஆகமம் ஏது

Sunday, 8 August 2021

Site Map

 

Site Keywords

 

kerala, tamilnadu, language

Links

https://www.facebook.com/kathiravan.ganesan.7

https://www.youtube.com/channel/UChDxPhDSr-lEEnvA6WbPVUw 

https://universityofcalicut.academia.edu/KathiravanGanesan

 http://sevajothi.blogspot.com/

https://kathir-kural.blogspot.com/

 

kural2

 சாலையறும் வீடமிழும் செய்யழுகும் கார்பெருகின்
சோலையெலாம் வேர்நழுவிப் போம்

 
ஆக்கும் திறனில்லை ஆயினும் வந்ததைத்
தேக்கும் திறனுண்டேல் நன்று
 
மறுமை தொழுதுபொல்லா இம்மை பொறுத்தல்
வறுமை உழலும் வழி
 
உலகு பெருங்கூண்டு நாம்கிளிக் கூட்டம்
வளர்ப்பது யார்விளை யாட்டு
 
இருப்பார்நூல் வாங்கிடுவர் இல்லாரென் செய்வர்
விருப்புநூல் கற்பதற் கு 

ஆவிபறி போகுமையோ ஆலையைத்தான் மூடென்றோம்
ஆவி பறித்த தரசு
 
 அழிமழை ஓசைகேட்டு அஞ்சுதே நெஞ்சம்
பொழிமழையே போதும் நிறுத்து
 
இவரை இதனால் மணமுடிப்போம் என்றாய்ந்(து)
அவரையே காதல் செயல்
 
நாடாள்வோர் செய்பிழையால் நோய்க்கஞ்சி வாழ்விழந்து
காடாக மாறுதிந்த நாடு
 
நொடியில் உருட்டி விழுங்கு(து) இயற்கை
துடித்துச் சுருங்குது வாழ்வு 

kathirkural

 நால்வர்க்கு ஊண்தருவோம் நாமுண்போம் நீத்தார்தம்
வாழ்வெண்ணி வாழ்வோம் சிறந்து

கோவணம் கட்டான்தான் வேட்டி தலைப்பாகை
ஆவணுமா என்பான் எரிந்து

பழமென்று போற்றிப் புகழ்வார் முரண்டால்
கிழமென்று தள்ளி விடும்

மொழியகழ்ந்து சொன்னார் தமிழ்த்தொன்மை மூத்தோர்
குழியகழத் தோன்றுதின்று சான்று

நானில்லை நீயில்லை நாமென்று கூடினார்க்கு
தேன்சேர் கனியாகும் வாழ்வு

தாண்டா(து) உயர்ந்தனன் நண்பன் வலியுணர்ந்து
பொன்னாய்ப் பொலிந்தது நட்பு

பெண்புகாத கோயிலும் பெண்செயாத பூசையும்
பெண்தொழாத தெய்வமும் பாழ்

பெண்ணைத் தெருட்டிப் புணர்வோன்தான் யாரெனினும்
மண்ணில் உயிர்வாழல் தீது

சாதி மறப்பர் பெரியார் சிறியார்தம்
சாதிக்குள் காதலிப்பர் பார்

பணமுதலை காக்கும் திறன்கற்றார் அன்று
வனமுதலை விட்ட பொழுது